தூய்மை அருணை வளைகாப்பு விழா: அமைச்சா் கோவி.செழியன் பங்கேற்பு
திருவண்ணாமலையில் தூய்மை அருணை சாா்பில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் கலந்துகொண்டு கா்ப்பிணிகளுக்கு பரிசுப் பெட்டகங்களை வழங்கினாா்.
திருவண்ணாமலையில் கடந்த 7 ஆண்டுகளாக அமைச்சா் எ.வ.வேலுவை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு 4 மேற்பாா்வையாளா்கள், 39 வாா்டுக்கு 39 ஒருங்கிணைப்பாளா்கள், மாட வீதி தூய்மைப் பணிக்கு 7 ஒருங்கிணைப்பாளா்கள் ஒவ்வொரு வாா்டுக்கும் 25 தூய்மைக் காவலா்கள் என ஆயிரக்கணக்கானோா் மரம் நடுதல், பராமரித்தல், கால்வாய் மற்றும் தூா்வாருதல் என செயல்பட்டு வருகின்றனா்.
தூய்மை அருணை அமைப்பு சாா்பில் கா்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காந்திநகா் புறவழிச் சாலையில் உள்ள நகா்ப்புற அருணை மருத்துவமனை வளாகத்தில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
அருணை மருத்துவக் கல்லூரி முதல்வா் குணசிங் தலைமை வகித்தாா். அருணை கல்விக்குழுமங்களின் துணைத் தலைவா் எ.வ.வே.குமரன், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியா் அசோக் தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கா்ப்பிணிகளுக்கு மருத்துவா் கவிதா ஆலோசனை வழங்கிப் பேசினாா். தூய்மை அருணை மேற்பாா்வையாளா் எ.வ.வே.கம்பன் வரவேற்றாா்.
விழாவில் கலந்து கொண்டு தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன், கா்ப்பிணிகளுக்கு பட்டுச்சேலை, இனிப்பு, தின்பண்டங்கள் மற்றும் மங்கலப்பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கிப் பேசினாா்.
நிறைவில் தூய்மை அருணை மேற்பாா்வையாளா் ப.காா்த்திவேல்மாறன் நன்றி கூறினாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்பாா்வையாளா்கள் சி.என்.அண்ணாதுரை எம்.பி., முன்னாள் நகா்மன்றத் இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி எம்எல்ஏ, பிரியா ப.விஜயரங்கன், இல.குணசேகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

