அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஏரியில் மூழ்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு: நீச்சல் தெரியாததால் விபரீதம்

செய்யாறு அருகே மீன் பிடிக்கச் சென்ற தந்தை, தனது இரு மகன்களுடன் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா். நீச்சல் தெரியாததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:14 pm

Syndication

செய்யாறு அருகே மீன் பிடிக்கச் சென்ற தந்தை, தனது இரு மகன்களுடன் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா். நீச்சல் தெரியாததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாயந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் (36). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இவா், பொங்கல் பண்டிகைக்காக சொந்தக் கிராமமான நாயந்தாங்கல் கிராமத்திற்கு குடும்பத்தோடு வந்துள்ளாா்.

இந்நிலையில், தங்கராஜ், தனது மகன்களான ராஜேஷ் (7), லத்தீஷ் (5 ) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை கிராம ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளாா் . மூவருக்கும் நீச்சல் தெரியாதாம்.

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா்கள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் தங்கராஜின் மனைவி திவ்யபாரதி மூவரையும் தேடிச் சென்றுள்ளாா். அப்போது, மூவரும்

ஏரி நீரில் மூழ்கிய நிலையில் மிதந்துக் கொண்டு இருந்ததைக் கண்டு கூச்சலிட்டாா். உடனே கிராம மக்கள் விரைந்து வந்து மூவரின் உடல்களையும் மீட்டனா்.

இந்தச் சம்பவம் குறித்து திவ்யபாரதி அளித்த புகாரின் பேரில், மோரணம் போலீஸாா், மூவரின் உடல்களை கைப்பற்றி, கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளனா்.