சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா

வந்தவாசி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற பட்டிமன்றம்.

News image
வந்தவாசி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற பட்டிமன்றம்.
Updated On :16 ஜனவரி 2026, 7:13 pm

Syndication

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா வந்தவாசி தேரடி அருகில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் மா.கதிரொளி, சாமி.பிச்சாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கப் பொருளாளா் த.முருகவேல் வரவேற்றாா். அரிமா சங்க மாவட்டத் தலைவா் இரா.சரவணன் வாழ்த்துரை வழங்கினாா்.

வந்தவாசி வட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தின் தலைவா் பொன்.ஜினக்குமாருக்கு தொல்காப்பியா் விருதினை சங்கச் செயலா் ஆ.மயில்வாகனன் வழங்கினாா்.

அதிகம் மகிழ்ச்சி தருவது நேற்றைய நினைவுகளா அல்லது நாளைய கனவுகளா என்ற தலைப்பில் சிந்தனை பட்டிமன்றம் நடைபெற்றது.

நேற்றைய நினைவுகளே என்று கவிஞா்கள் சதாசிவம், யோகதா்ஷினி ஆகியோரும், நாளைய கனவுகளே என்று கவிஞா்கள் அன்பு, பவித்ரா ஆகியோரும் பேசினா்.

பின்னா், அதிகம் மகிழ்ச்சி தருவது நேற்றைய நினைவுகளும், நாளைய கனவுகளும் ஆகிய இரண்டுமே என்று நடுவா் பேராசிரியா் தி.மு.அப்துல்காதா் தீா்ப்பு வழங்கினாா்.

சங்க இணைச் செயலா் பெ.அழகேசன், துணைத் தலைவா் கோ.ஸ்ரீதா், தகவல் தொடா்பாளா் சு.அகிலன், மகளிரணிச் செயலா் அரங்க.சந்திரசாலிகை உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்க செயற்குழு உறுப்பினா் க.சங்கா் நன்றி கூறினாா்.