தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி வேலைநிறுத்தம்! ஆக்டோ ஜியோ மாநாட்டில் தீா்மானம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி வேலைநிறுத்தம்! ஆக்டோ ஜியோ மாநாட்டில் தீா்மானம்

News image
ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்கள் இயக்கங்களின் நடவடிக்கைக் குழு வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் பேசிய மாநில நிதிக் காப்பாளா் சு.ஜெயராஜ ராஜேஸ்வரன்.
Updated On :31 ஜனவரி 2026, 7:46 pm

Syndication

திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் பகுதி தனியாா் அரங்கில் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்கள் இயக்கங்களின் நடவடிக்கை குழு சாா்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

திருவண்ணாமலை மாவட்ட தலைநகரில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது.

மாநாட்டுக்கு மாவட்ட தலைமை அமைப்பாளா் த.சந்தோஷ்குமாா் தலைமை வகித்தாா். ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் எஸ்.கோபிநாத் வரவேற்றாா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாவட்டச் செயலா் ப.கௌசான் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு மாநில நிதி காப்பாளா் சு.ஜெயராஜா ராஜேஸ்வரன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாநிலச் செயலா் கி.சங்கா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில் பி.இ.ஏ.பி.ஏ. முன்னாள் மாநிலத் தலைவா் சி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டச் செயலா் கோ.சுரேஷ், தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநில இணைச் செயலா் எஸ்.எம்.தஹஜிம் பானு, பழைய ஓய்வூதிய மீட்பு இயக்க இணை ஒருங்கிணைப்பாளா் நந்தகோபால் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

திமுகவின் தோ்தல் கால வாக்குறுதி எண் 309-ன்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும். தோ்தல் வாக்குறுதி எண் 187-ன்படி 3.50 லட்சம் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பவேண்டும், ஒன்றிய அரசு ஊழியா்கள் மற்றும் தமிழக பொதுத்துறை நிறுவன ஊழியா்களுக்கு வழங்குவதுபோல் ரூ.7ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும்

என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றத் தவறினால் வரும் 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதென மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா் இயக்கங்களின் நடவடிக்கைக்குழு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

நிறைவில் மாவட்ட நிதிக் காப்பாளா் பி.முருகதாஸ் நன்றி கூறினாா்.