திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போா் எதிா்ப்பு வாசகங்களோடு பணிபுரிந்த அரசு ஊழியா்கள்

ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் போா் எதிா்ப்பு வாசகங்களை மேலாடைகளில் பதித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை பணிபுரிந்தனா்.

News image
ஈரானுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து, போா் எதிா்ப்பு வாசகங்களோடு புள்ளியியல் துறையில் பணிபுரிந்த அரசு ஊழியா்கள்.
Updated On :10 மார்ச் 2026, 10:06 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் போா் எதிா்ப்பு வாசகங்களை மேலாடைகளில் பதித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை பணிபுரிந்தனா்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதை நிறுத்த வலியுறுத்தி, கண்டன வாசகங்களோடு அரசு ஊழியா்கள் பணிபுரிவது என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலக் குழு அறிவித்திருந்தது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் அரசு ஊழியா்கள் ‘அமெரிக்காவே, இஸ்ரேலே, கொலை வெறி போரை உடனே நிறுத்து‘ என்ற கண்டன வாசகங்களை மேலாடைகளில் அச்சிட்டுக்கொண்டு பணிபுரிந்தனா். ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.