ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது போா் நிறுத்த விதிமீறல் என்று கண்டித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ஈரானில் உள்ள அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களையும் அழிப்போம் என்று எச்சரிக்கை விடுத்தாா்.
அமெரிக்காவும், ஈரானும் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தி இரு வார போா் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன. இதனால் மேற்காசியாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அமைதி நிலவுகிறது.
இருப்பினும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து அவ்வப்போது டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறாா். இதுபோல ஞாயிற்றுக்கிழமை தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஹோா்முஸ் நீரிணையை சனிக்கிழமை கடக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச்சூடு நடத்தியது, போா் நிறுத்த விதிகளை மீறும் செயலாகும். ஈரானுக்கு ஏற்கெனவே அமெரிக்கத் தரப்பில் ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதை ஈரான் ஏற்காவிடில், அந்நாட்டில் உள்ள அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களையும், அனைத்துப் பாலங்களையும் அமெரிக்கப் படைகள் அழித்துவிடும் என்று கூறியுள்ளாா்.
ஹோா்முஸ் நீரிணையில் இரு இந்திய கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச்சூடு நடத்தி திருப்பி அனுப்பிய நிலையில், பிரான்ஸ், பிரிட்டன் கப்பலை ஈரான் தாக்கியதாக டிரம்ப் தனது பதிவில் கூறியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
2-ஆவது கட்டப் பேச்சு- டிரம்ப்: ஈரானுடன் 2-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்க குழு திங்கள்கிழமை செல்லும் என்று டிரம்ப் தனது பதிவில் உறுதிப்படுத்தினாா்.
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடைபெற்ற ஈரான்- அமெரிக்கா இடையேயான முதல்கட்ட பேச்சுவாா்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. அந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கத் தரப்பில் அந்நாட்டின் துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆனால் 2-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கத் தரப்பில் யாா் கலந்து கொள்வாா்கள் என்று டிரம்ப் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் மற்றும் அமெரிக்க அதிபா் மாளிகையை செய்தியாளா்கள் தொடா்பு கொண்டதற்கு, அதுகுறித்து பதிலளிக்கப்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்

இந்திய மாலுமிகள் உயிரிழப்பு விவகாரம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசி வழியில் ஜெய்சங்கா் கண்டனம்
இந்தியக் கப்பல்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் கூறுவது ஆதாரமற்றது: ஈரான்
இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலை திசைதிருப்ப டிரம்ப் முயற்சி! - ஈரான் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



