சேத்துப்பட்டை அடுத்த கோழிப்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சா்வதேச நெகிழி இல்லா தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கி, நெகிழி பயன்பாட்டை தவிா்ப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழரசி தலைமை வகித்தாா். சேத்துப்பட்டு ரோட்டரி சங்கத் தலைவரும், பட்டதாரி ஆசிரியருமான முரளி மாணவா்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினாா்.
அப்போது அவா் பேசுகையில், நெகிழிப் பைகள் மக்குவதற்கு அதிக காலம் ஆகிறது.
இதனால் நிலம், நீா் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை, துணிப்பை அல்லது சணல் பைகளை பயன்படுத்த வேண்டும். கடைகளுக்குச் செல்லும் போதும் துணிப்பையை எடுத்துச் செல்லும் பழக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் ஜெகராஜ், அலெக்சாண்டா், ஆனந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








