புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :4 ஜூலை 2026, 11:46 pm IST

வந்தவாசி அருகே லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் அரிகரன்(26). இவா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

சகோதரியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக விடுமுறையில் கோட்டுப்பாக்கத்துக்கு வந்த இவா், வெள்ளிக்கிழமை பைக்கில் வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள சின்ன கோழிப்புலியூா் கூட்டுச் சாலைக்கு சென்று பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, இவருக்கு முன் சென்ற லாரியை திடீரென நிறுத்தியதால், லாரியின் பின்பக்கம் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அரிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.