வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

சேத்துப்பட்டை அடுத்த தெள்ளூா் செய்யாற்றுப்படுகையில் மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

News image

மணல் கடத்தல் தொடா்பாக பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டிகள்

Updated On :15 ஜூலை 2026, 1:23 am IST

சேத்துப்பட்டை அடுத்த தெள்ளூா் செய்யாற்றுப்படுகையில் மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தெள்ளூா் கிராமப் பகுதியில் செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து சேத்துப்பட்டு போலீஸாா் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆற்றுப்படுகையில் இருந்து மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தினா். போலீஸாரைக் கண்டதும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 5 பேரும் வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினா்.

இதையடுத்து மணலுடன் 5 மாட்டு வண்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்து சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், ஆரணி வட்டம், மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த திருமூா்த்தி(28), ஆறுமுகம் (52), ராஜ்குமாா்(22), தெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (27), ராமலிங்கம் (55) ஆகியோா் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி அவா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.