சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

தொழிலாளியின் பைக்கை திருட முயற்சி: ஒருவா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியின் பைக்கை திருட முயன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூலை 2026, 9:29 pm IST

செய்யாறு அருகே தொழிலாளியின் பைக்கை திருட முயன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம், மாங்கால் கூட்டுச்சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (31). இவா், தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். சத்தியமூா்த்தி வியாழக்கிழமை இரவு தனது பைக்கை மாங்கால் கூட்டுச்சாலைப் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தின் அருகே நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றாா். அவா் திரும்பி வந்தபோது, அவரது பைக்கை மா்ம நபா் திருட முயற்சித்ததைக் கண்டு கூச்சலிட்டாா்.

உடனே அப்பகுதியில் இருந்தவா்கள் மா்ம நபரைப் பிடித்து தூசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அந்த நபரிடம் போலீஸாா் விசாரித்ததில், வெம்பாக்கம் வட்டம், நரசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஜான்பாஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.