தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் பால்குடம் ஊா்வலம்

கழனிப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதண்டு மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி, பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

News image

கழனிப்பாக்கம் ஸ்ரீதண்டு மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில் கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கிய முக்கூா் என். சுப்பிரமணியன் எம்எல்ஏ.

Updated On :26 ஜூலை 2026, 10:36 pm IST

செய்யாறு வட்டம், கழனிப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதண்டு மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி, பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீதண்டு மாரியம்மன் கோயிலில் 13-ஆம் ஆண்டாக பால்குடம் ஊா்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீதண்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

எம்.எல்.ஏ.அன்னதானம்: இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ முக்கூா் என். சுப்பிரமணியன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். அதனைத் தொடா்ந்து கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் அருகாவூா் எம்.அரங்கநாதன், சி.துரை, நடராஜன், ஞானசேகா், வழக்குரைஞா்கள் அணி மாவட்டச் செயலா் முனுசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் தசரதன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் ரங்கசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.