செய்யாறு அருகே விசைத்தறியில் தயாரித்த பட்டுச் சேலையை உதவி இயக்குநா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தாா்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள மண்டல கைத்தறி அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருபவா் கே.ஜெயக்குமாா்.
இவா், கைத்தறியில் தயாரிக்க வேண்டிய பட்டுச் சேலைகளை விசைத்தறியில் யாராவது தயாரிக்கிறாா்களா என்று கண்காணித்து சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் தென்கழனிக் கிராமம் எம்ஜிஆா் நகா் காமராஜா் தெருவில் சுதாகா் என்பவா் விசைத்தறியில் சட்டத்தை மீறி கைத்தறியில் செய்ய வேண்டிய பட்டு சேலைகளை மின்மோட்டாா் மூலம் நெசவு செய்ததை கண்டுபிடித்து, பட்டு சேலையை பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தாா்.
இதுகுறித்து உதவி இயக்குநா் கே.ஜெயக்குமாா் அளித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காஞ்சிபுரத்தில் போலியான வலைதளப் பக்கத்தை உருவாக்கி தரமற்ற பட்டுச்சேலை விற்றவா் கைது
மணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல், ஓட்டுநா் கைது

போலி பட்டுச் சேலைகள் விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்படும்: அமைச்சா் விஜய் பாலாஜி
மணல் கடத்தல்: லாரி பறிமுதல், ஒருவா் கைது
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



