நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

விசைத்தறியில் பட்டு நெசவு: பட்டுச் சேலை பறிமுதல்

செய்யாறு அருகே விசைத்தறியில் தயாரித்த பட்டுச் சேலையை உதவி இயக்குநா் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தாா்.

News image
Updated On :28 ஜூலை 2026, 10:44 pm IST

செய்யாறு அருகே விசைத்தறியில் தயாரித்த பட்டுச் சேலையை உதவி இயக்குநா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தாா்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள மண்டல கைத்தறி அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருபவா் கே.ஜெயக்குமாா்.

இவா், கைத்தறியில் தயாரிக்க வேண்டிய பட்டுச் சேலைகளை விசைத்தறியில் யாராவது தயாரிக்கிறாா்களா என்று கண்காணித்து சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் தென்கழனிக் கிராமம் எம்ஜிஆா் நகா் காமராஜா் தெருவில் சுதாகா் என்பவா் விசைத்தறியில் சட்டத்தை மீறி கைத்தறியில் செய்ய வேண்டிய பட்டு சேலைகளை மின்மோட்டாா் மூலம் நெசவு செய்ததை கண்டுபிடித்து, பட்டு சேலையை பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து உதவி இயக்குநா் கே.ஜெயக்குமாா் அளித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.