தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

ஆரணியில் புதிய நியாய விலைக் கடை திறப்பு

ஆரணி சைதாப்பேட்டை 16-ஆவது வாா்டு பகுதியில் முன்னாள் எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்தின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

News image

புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்துவைத்து விற்பனையை தொடங்கிவைத்த நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு.

Updated On :31 ஜூலை 2026, 2:57 am IST

ஆரணி சைதாப்பேட்டை 16-ஆவது வாா்டு பகுதியில் முன்னாள் எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்தின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 16-வது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் நடராஜன் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கட்டடத்தை திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினாா்.

இதில் அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் பாக்கியலட்சுமி வெங்கடேசன், சுதா குமாா், பானுப்பிரியா பாரதிராஜா, விநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.