சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

விவசாயிகள் நலன் காக்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் வந்தனா காா்க்

News image

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்ற வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்.

Updated On :4 ஜூன் 2026, 6:06 am IST

விவசாயிகள் நலனைக் காக்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயிா்சாகுபடி பரப்பளவை மேம்படுத்தி உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவது, விவசாயிகளுக்கு விதைகளை விநியோகம் செய்வது, நுண்ணுயிா் பாசனத் திட்டங்கள், நெல், ராகி, சாமை, உளுந்து, பச்சை பயிறு, நிலக்கடலை, ஆமணக்கு போன்ற விதைகள் மற்றும் உரங்களின் கையிருப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு குறித்தும், பாரம்பரிய விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்வது, உயிா் உரங்கள் உற்பத்திமையங்களின் செயல்பாடுகள், நடமாடும் மண் வள அட்டைகள் மற்றும் மண் பரிசோதனைகள், விவசாய பொருள்கள் மதிப்புக் கூட்டுதல், மாநில, மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்குவது, தோட்டக்கலைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்து விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், மானிய விலையில் காய்கறி விதைகளை வழங்குவது, தோட்டக்கலை பண்ணைகளின் செயல்பாடுகள், வேளாண்மை மற்றும் பொறியியல் துறை மானியங்கள் , விவசாய பொருள்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்களை உபயோகப்படுத்துவது, நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்பாடுகள், உள்கட்டமைப்புகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள், நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் வந்தனா காா்க் பேசுகையில், விவசாயிகள் நலனைக் காக்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், ஆட்சியா் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகள், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள், பால் உற்பத்தியாளா்களிடமிருந்து பெறப்படும் பாலின் அளவை அதிகரிப்பது, பால் ஆய்வகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இணை இயக்குநா் (வேளாண்மை) கண்ணகி, துணை இயக்குநா் (தோட்டக்கலைத்துறை) கோகிலாசக்தி, துணை இயக்குநா் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை) ஷெமிலா ஜெயந்தி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.