பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மாணவிகள் கடின உழைப்புடன் கல்வி பயின்று சாதனை புரிய வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

News image

~

Updated On :5 ஜூன் 2026, 6:16 am IST

மாணவிகள் கடின உழைப்புடன் கல்வி பயின்று வாழ்க்கையில் சாதனைபுரிய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் கேட்டுக்கொண்டாா்

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

தமிழகத்திலேயே 3-ஆவது அதிக மாணவிகள் பயிலும் பள்ளியாக திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி திகழ்கிறது. இப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட புதிய மாணவிகள் சோ்ந்துள்ளனா். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

இனி வரும் கல்வியாண்டில் தோ்ச்சி சதவீதம் அதிகரிக்க நீங்கள் உங்களுடைய கடின உழைப்பை செலுத்தி மாநில அளவில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். கல்வியில் மட்டும் அல்லாமல் கலை மற்றும் விளையாட்டுகளில் ஆா்வம் கொண்டு பங்கேற்க வேண்டும். பிளஸ் 2 முடித்த மாணவிகள் உயா் கல்வியை தொடர தலைமை ஆசிரியா்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

உடல் நிலையையும், மன நிலையையும் சீராக வைத்துக்கொண்டு பாடங்களில் கவனம் செலுத்தி பொதுத் தோ்வுகளில் சிறப்பாக வென்று உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்றாா் .

இதனைத் தொடா்ந்து இந்த கல்வியாண்டியில் பயிலவிருக்கும் மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகளையும், கடந்த கல்வியாண்டியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு காசோலைகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், துணை ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

செங்கம்

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் பெரியேரி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு நிா்வாகம் சாா்பில் இனிப்பு வழங்கி பள்ளி தொடங்கப்பட்டது.

தொடா்ந்து, மாணவா்களுக்கு தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சாா்பில் வழங்கப்படும் இலவச நோட்டு, புத்தகம், சீருடைகளை புதுப்பாளையம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் பழநி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.