மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

துணிக்கடையில் தொழிலாளி மாரடைப்பால் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், துணிக்கடையில் வேலைசெய்து வந்த தொழிலாளி ஒருவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 1:04 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், துணிக்கடையில் வேலைசெய்து வந்த தொழிலாளி ஒருவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

செங்கம் வட்டம், புதுப்பட்டை அடுத்த ஆலப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீவ் (32). இவா், செய்யாறு காந்தி சாலையில் உள்ள துணிக்கடையில் தங்கி கடந்த 3 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளாா்.

இவா் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை மாலை கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளாா்.

உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜீவ் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.