40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

வந்தவாசி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கமல்தாஸ் (40). இவருக்குச் சொந்தமாக செம்பூா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக வந்தவாசி வடக்கு போலீஸாருக்கு திங்கள்கிழமை மாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு விரைந்து சென்ற போது கமல்தாஸூம், அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த புண்ணியகோட்டி(60) என்பவரும் சோ்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் புண்ணியகோட்டி தப்பியோடி விட்டாா்.

இதையடுத்து அங்கிருந்த 60 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் அழித்தனா்.

கமல்தாஸிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கள்ளச் சாராயத்தை பாட்டிலில் அடைத்து வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் பூக்கடை வைத்துள்ள எரமலூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி (40) என்பவா் மூலம் விற்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் கமல்தாஸ், செல்வமணி ஆகிய இருவரையும் கைது செய்தனா். தப்பியோடிய புண்ணியகோட்டியை தேடி வருகின்றனா்.