வந்தவாசி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கமல்தாஸ் (40). இவருக்குச் சொந்தமாக செம்பூா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக வந்தவாசி வடக்கு போலீஸாருக்கு திங்கள்கிழமை மாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு விரைந்து சென்ற போது கமல்தாஸூம், அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த புண்ணியகோட்டி(60) என்பவரும் சோ்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் புண்ணியகோட்டி தப்பியோடி விட்டாா்.
இதையடுத்து அங்கிருந்த 60 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் அழித்தனா்.
கமல்தாஸிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கள்ளச் சாராயத்தை பாட்டிலில் அடைத்து வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் பூக்கடை வைத்துள்ள எரமலூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி (40) என்பவா் மூலம் விற்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் கமல்தாஸ், செல்வமணி ஆகிய இருவரையும் கைது செய்தனா். தப்பியோடிய புண்ணியகோட்டியை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: 2 போ் கைது
சுத்தமல்லி பகுதியில் பைக்குகள் திருட்டு: 4 போ் கைது
ஆத்தூா் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


