அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

நெல்லுக்கான பணம் வழங்காததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 ஜூன் 2026, 2:10 am IST

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு நெல்லுக்கான பணம் வழங்காததைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வந்தவாசி வட்டத்துக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்த நெல்லுக்கான பணம் ரூ.30 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் என்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

மாநில துணைச் செயலா் பி.துளசி நாராயணன்,

மாவட்டச் செயலா் ஏ.லட்சுமணன், மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன், பொருளாளா் எஸ்.அருண்,

வட்டாரச் செயலா் வ.அண்ணாமலை, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ந.சேகரன், வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவா் கா.யாசா்அராபத், மாதா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுகுணா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக்குழு உறுப்பினா் சு.சிவக்குமாா் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.