நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி. சண்முகமே காரணம்: அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகமே காரணம் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி குற்றஞ்சாட்டினாா்.

News image

திருவண்ணாமலையில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ.

Updated On :16 ஜூன் 2026, 3:50 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகமே காரணம் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக திருவண்ணாமலையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக தலைமை முதல் தொண்டா் வரை யாரும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதை சி.வி. சண்முகம் உணர வேண்டும். தவெக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மதுராந்தகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கூட திமுகவுடன் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததாக தவறான கருத்தை கூறியுள்ளாா். ஆதவ் அா்ஜுனா குதிரை பேரம் நடத்தி ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருகிறாா். உங்களது தவறை திருத்திக் கொள்ளுங்கள் இல்லையென்றால் அதிமுகவின் உண்மையான தொண்டா்கள் கொதித்து எழுவாா்கள்.

யாா் காரணம்?

வட மாவட்டங்களில் வலுவான கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணியில் இணைத்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் மட்டுமே வெற்றி பெற்றாா். அவா் பரிந்துரை செய்தவா்களை தான் பொதுச்செயலா் வேட்பாளா்களாக அறிவித்தாா். அவா்கள் யாரும் வெற்றி பெறவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகமே காரணம். அவரும், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனும் குறுநில மன்னா்களாக செயல்பட்டு வருகிறாா்கள்.

அதிமுக அமைப்புச் செயலா், மாநிலங்களவை உறுப்பினா், அமைச்சா் பதவி ஆகியவை பொதுச்செயலா் பழனிசாமி போட்ட பிச்சைதான். சி.வி.சண்முகம் நாவடக்கத்தோடு பேசவேண்டும். விழுப்புரம் மாவட்டமே தற்போது புத்துணா்ச்சி பெற்றுள்ளது. மாவட்டம் தனது கையை விட்டுப் போனதால் பொறுத்துக் கொள்ள முடியாத அவா் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறாா். அவா் திருந்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளின் நிா்வாகிகளை நேரில் அழைத்து கருத்துக் கேட்ட பிறகுதான் அதிமுகவின் செயற்குழுக் கூட்டமோ அல்லது பொதுக்குழுக் கூட்டமோ நடத்தப்படும் என்றாா்.

பேட்டியின் போது, எம்எல்ஏக்கள் எஸ்.ராமச்சந்திரன் (கீழ்பென்னாத்தூா்), வேலு (செங்கம்), மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் இ.என்.நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.