/
வந்தவாசியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி தெற்கு போலீஸாா் சேதராகுப்பம் புறவழிச்சாலை சந்திப்பு வழியாக புதன்கிழமை மாலை ரோந்து சென்றனா்.
அப்போது அந்தப் பகுதியில் 3 போ் நின்று கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்வதை கண்டனா்.
இதையடுத்து அவா்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் 3 பேரும் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா்(26), சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன்(24) வந்தவாசி நகரைச் சோ்ந்த விஷ்வேந்திரன்(24) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
சுத்தமல்லி அருகே ஆடு திருடிய 3 போ் கைது
கஞ்சா விற்பனை செய்த 2 போ் கைது
கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 போ் கைது
கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


