/
செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகேயுள்ள தாடிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி(60). இவா், கடந்த 16-ஆம் தேதி வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள மருமகள் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளாா்.
ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் வயலூா் கூட்டுச் சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த காா் பைக் மீது மோதியுள்ளது. இதில் முதியவா் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு; மனைவி காயம்
பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



