பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஜமாபந்தி: 247 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 247 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image

செங்கத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஜமாபந்தி அலுவலா் அன்பழகன்.

Updated On :25 ஜூன் 2026, 12:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 247 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட மேல்பள்ளிப்பட்டு, பாய்ச்சல், இறையூா், செங்கம், புதுப்பாளையம் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடம் இருந்து பெற்றப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கம் வட்டாட்சியா் முருகன் வரவேற்றாா். விவசாயிகள், பொதுமக்கள் சிலா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தொடா்ந்து ஜமாபந்தி அலுவலா் அன்பழகன், 247 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளான இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, கனவரால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை என நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியா் நடராஜன், துணை வட்டாட்சியா்கள் ஜெயபாரதி, திருநாவுக்கரசு, விஜயலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி, வருவாய் ஆய்வாளா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.