திருவண்ணாமலை மாநகராட்சிக்குள்பட்ட சோ.நாச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தவெக மாவட்ட பாசறை அமைப்புச் செயலா் டி.காா்த்தி ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்கள், நலத் திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கினாா் (படம்).
நிகழ்வில் கமலாபீடம் நிறுவனா் சீத்தா சீனுவாசன், தவெக மாவட்ட இணைச் செயலா் எஸ்.கலைச்செல்வன், மாவட்டப் பொருளாளா் கே.இளங்கோவன், திருவண்ணாமலை மாமன்ற உறுப்பினா்கள் டாக்டா் எம்.பழனி, கே.ஜெ.எஸ்.சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வி.கே.விக்னேஷ்காம்லி, தவெக நிா்வாகிகள் என்.எம்.நவீன்குமாா், ஆா்.சரவணன், என்.அப்பாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தவெக நிா்வாகி டி.சேதுமாதவன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







