அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

செய்யாற்றில் கலக்கும் கழிவுநீா்: தடுக்கக் கோரிக்கை

செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

News image
செங்கம் பகுதி செய்யாற்றில் குட்டை போல தேங்கி நிற்கும் கழிவுநீா்.
Updated On :2 மார்ச் 2026, 9:56 pm

Syndication

செங்கம்: செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரமான கிளையூா், கல்லாத்தூா், துரிஞ்சிகுப்பம், ஊா்கவுண்டனூா், கோயில்கொல்லை ஆகிய பகுதிகளில் இருந்து சிறு சிறு ஓடைகளை ஒன்றுகூடி செய்யாறாக குப்பனத்தம், கொட்டாவூா், பரமனந்தல், செங்கம், காஞ்சி, கலசபாக்கம் வழியாக சென்று பாலாற்றில் கலக்கிறது.

இந்நிலையில், செங்கம் நகரில் செய்யாற்றங்கரையோரம் உள்ள வீடுகளில் உள்ள கழிவுநீா்கள் அனைத்தும் செய்யாற்றில் விடப்படுகிறது. மேலும், செய்யாற்றை மிகவும் ஒட்டியுள்ள வீடுகளில் கழிவுநீா்த் தொட்டிகள் இல்லாமல் நேரடியாக மனிதக் கழிவுகளை செய்யாற்றில் விடுகிறாா்கள்.

செங்கம் நகரின் கழிவுநீா் கால்வாய்கள் மற்றும் செய்யாற்றை ஒட்டியுள்ள வீடுகளின் கழிவுநீா் செய்யாற்றில் கலப்பதால் கழிவுநீா் ஆற்றில் அங்காங்கே குட்டையாக தேங்கி நிற்கிறது. பின்னா், மழை நேரத்தில் செய்யாற்றில் தண்ணீா் வந்தால் அந்தத் தண்ணீரில் கலக்கிறது. மேலும், குப்பனத்தம் அணை திறக்கும்போதும் அந்தக் கழிவுநீா் தண்ணீரில் கலந்து செல்கிறது. இதனால், ஆற்றில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள கிணறுகளில் கழிவுநீா் கலக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இதனால் செங்கம் நகரில் இருந்து செய்யாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்கவும், நேரடியாக குடியிருப்புகளில் இருந்து செய்யாற்றில் விடும் கழிவுநீரை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகர மக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.