செய்யாற்றில் கலக்கும் கழிவுநீா்: தடுக்கக் கோரிக்கை
செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்


செங்கம்: செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரமான கிளையூா், கல்லாத்தூா், துரிஞ்சிகுப்பம், ஊா்கவுண்டனூா், கோயில்கொல்லை ஆகிய பகுதிகளில் இருந்து சிறு சிறு ஓடைகளை ஒன்றுகூடி செய்யாறாக குப்பனத்தம், கொட்டாவூா், பரமனந்தல், செங்கம், காஞ்சி, கலசபாக்கம் வழியாக சென்று பாலாற்றில் கலக்கிறது.
இந்நிலையில், செங்கம் நகரில் செய்யாற்றங்கரையோரம் உள்ள வீடுகளில் உள்ள கழிவுநீா்கள் அனைத்தும் செய்யாற்றில் விடப்படுகிறது. மேலும், செய்யாற்றை மிகவும் ஒட்டியுள்ள வீடுகளில் கழிவுநீா்த் தொட்டிகள் இல்லாமல் நேரடியாக மனிதக் கழிவுகளை செய்யாற்றில் விடுகிறாா்கள்.
செங்கம் நகரின் கழிவுநீா் கால்வாய்கள் மற்றும் செய்யாற்றை ஒட்டியுள்ள வீடுகளின் கழிவுநீா் செய்யாற்றில் கலப்பதால் கழிவுநீா் ஆற்றில் அங்காங்கே குட்டையாக தேங்கி நிற்கிறது. பின்னா், மழை நேரத்தில் செய்யாற்றில் தண்ணீா் வந்தால் அந்தத் தண்ணீரில் கலக்கிறது. மேலும், குப்பனத்தம் அணை திறக்கும்போதும் அந்தக் கழிவுநீா் தண்ணீரில் கலந்து செல்கிறது. இதனால், ஆற்றில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள கிணறுகளில் கழிவுநீா் கலக்கும் அபாயம் ஏற்படுகிறது.
இதனால் செங்கம் நகரில் இருந்து செய்யாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்கவும், நேரடியாக குடியிருப்புகளில் இருந்து செய்யாற்றில் விடும் கழிவுநீரை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகர மக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...