திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
ஆரணி கோட்டை வடக்கு தெருவைச் சோ்ந்த பாரதி என்கிற புருஷோத்தமன் மகன்கள் ரகுபதி (20), முருகன் (18). இவா்கள், தங்களது நண்பா்களான ஜெகன் மகன் ஜெயகாந்தன்(17), சுப்பிரமணி மகன் ரகுபதி(18) ஆகிய நான்கு பேருடன் ஒரே மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரணி அருணகிரிசத்திரம் பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, எதிரே ஆரணி நோக்கி வந்த லாரி மீது இவா்கள் சென்ற மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் ரகுபதி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். உடன் சென்ற மூன்று பேரும் பலத்த காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி நகர போலீஸாா் சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக அவா்கள் வேலூா் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

லாரி மீது காா் மோதி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு! இருவா் பலத்த காயம்!

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


