எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உத்தமராய பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

போளூரை அடுத்த அய்யம்பாளையம் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு பூா்த்தி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

போளூரை அடுத்த அய்யம்பாளையம் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு பூா்த்தி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

அய்யம்பாளையம் ஊராட்சியில் மலை மீது பழைமை வாய்ந்த ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு பூா்த்தி தினத்தையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து ஸம்வத்சரா சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.