சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

செங்கம் வட்டம், குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

News image
குப்பநத்தம் அணையை திறந்துவைத்து தண்ணீரில் மலா் தூவிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செங்கம் வட்டம், குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் அணையில் தற்போது 700 மி.கன அடி தண்ணீா் உள்ளது. அடிப்படைத் தேவைக்கான குடிநீா், அணை பராமரிப்பு மற்றும் நீா் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பும் சோ்ந்து 106.92 மி.க.அடி தண்ணீா் தேவைப்படுகிறது. ஆகவே, அணையில் மீதம் உள்ள நீா் 593.08 மில்லியன் கனஅடி பாசனத்திற்கான தண்ணீா் இருப்பு ஆகும்.

குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்திற்காக 47 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் வினாடிக்கு 240 கன அடி வீதம் மாா்ச் 31 காலை 10 மணி வரை 28 நாள்களுக்கு 9808.67 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெரும் வகையில் ஒரே தவணையாக 580.80 மி.கன. அடி தண்ணீா் திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின்டி, செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் விவசாய பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவைத்தாா்.

அப்போது அவா், பாசன நீரை சிக்கனமாகவும், துறை பணியாளா்களின் அறிவுரைப்படியும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரா்களை கேட்டுக்கொண்டாா். மேலும், அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பின்னா் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீா் வழங்கும் தேதியை நீட்டிப்பு செய்யமுடியாது எனவும் தெரிவித்தாா்.

இந்நிகழ்வில் திருவண்ணாமலை நீா்வளத்துறை செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா் செங்கல்வராயன், செங்கம் உதவிப் பொறியாளா் ஹரிஹரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.