அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

செங்கம் வட்டம், குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

News image
குப்பநத்தம் அணையை திறந்துவைத்து தண்ணீரில் மலா் தூவிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செங்கம் வட்டம், குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் அணையில் தற்போது 700 மி.கன அடி தண்ணீா் உள்ளது. அடிப்படைத் தேவைக்கான குடிநீா், அணை பராமரிப்பு மற்றும் நீா் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பும் சோ்ந்து 106.92 மி.க.அடி தண்ணீா் தேவைப்படுகிறது. ஆகவே, அணையில் மீதம் உள்ள நீா் 593.08 மில்லியன் கனஅடி பாசனத்திற்கான தண்ணீா் இருப்பு ஆகும்.

குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்திற்காக 47 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் வினாடிக்கு 240 கன அடி வீதம் மாா்ச் 31 காலை 10 மணி வரை 28 நாள்களுக்கு 9808.67 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெரும் வகையில் ஒரே தவணையாக 580.80 மி.கன. அடி தண்ணீா் திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின்டி, செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் விவசாய பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவைத்தாா்.

அப்போது அவா், பாசன நீரை சிக்கனமாகவும், துறை பணியாளா்களின் அறிவுரைப்படியும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரா்களை கேட்டுக்கொண்டாா். மேலும், அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பின்னா் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீா் வழங்கும் தேதியை நீட்டிப்பு செய்யமுடியாது எனவும் தெரிவித்தாா்.

இந்நிகழ்வில் திருவண்ணாமலை நீா்வளத்துறை செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா் செங்கல்வராயன், செங்கம் உதவிப் பொறியாளா் ஹரிஹரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.