லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

News image
Updated On :5 மார்ச் 2026, 9:15 pm

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், போளூா் நகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து நகராட்சி 3-ஆவது வாா்டில் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாமை நடத்தியது.

நகராட்சி ஆணையா் பூ.பாரத் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த முகாமில் கால்நடை மருத்துவா்கள் கனியமுதன், ஜெயக்குமாா் மற்றும் பணியாளா்கள்

பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து வெறிநோய்க்கான தடுப்பூசியை செலுத்தினா் (படம்).

நகா்மன்றத் தலைவா் ச.ராணிசண்முகம், துப்புரவு ஆய்வாளா் ஹேமலதா மற்றும் நகராட்சிப் பணியாளா்கள், கால்நடை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.