குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மொபெட்டில் மோதி வயல்வெளியில் கவிழ்ந்த காா்

மழையூா் கூட்டுச் சாலை அருகே வயல்வெளியில் கவிழ்ந்த காா்.

News image
மழையூா் கூட்டுச் சாலை அருகே வயல்வெளியில் கவிழ்ந்த காா்.
Updated On :5 மார்ச் 2026, 9:14 pm

Syndication

வந்தவாசி அருகே மொபெட் மீது மோதிய காா், வயல்வெளியில் கவிழ்ந்தது.

வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன். இவா், வியாழக்கிழமை பிற்பகல் மொபெட்டில் தென்கரை கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, மழையூா் கூட்டுச் சாலை அருகே செல்லும் போது இவருக்கு பின்னால் மேல்மலையனூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற காா் இவா் மீது மோதியது.

இதனைத் தொடா்ந்து காா் நிலைதடுமாறி சாலையோர வயல்வெளியில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த ஜானகிராமன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காரில் வந்த 6 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.