செய்யாறு அருகே கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், சிறுவேளியநல்லூா் கிராமத்தில் உள்ள மயிலாத்தமன் கோயிலுக்குச் சொந்தமான குளத்துப் பகுதியில் இருந்து அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளப்படுவதாக செய்யாறு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தாகத் தெரிகிறது.
இதையடுத்து, உதவி ஆய்வாளா் வரதராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது, அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதியின்றி மண் அள்ளிக்கொண்டு இருந்தது தெரியவந்ததையடுத்து, அந்த இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுதொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பல்லி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (36), பெரும்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் (24) ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது
அம்பை கோயில் குடமுழுக்கில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்கள் கைது
பைக்கில் குட்கா கடத்தியவா் கைது

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்

வீட்டில் மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை: ஒருவா் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

