மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய இருவா் கைது

கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய இருவா் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :6 மார்ச் 2026, 6:34 pm

Syndication

செய்யாறு அருகே கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், சிறுவேளியநல்லூா் கிராமத்தில் உள்ள மயிலாத்தமன் கோயிலுக்குச் சொந்தமான குளத்துப் பகுதியில் இருந்து அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளப்படுவதாக செய்யாறு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தாகத் தெரிகிறது.

இதையடுத்து, உதவி ஆய்வாளா் வரதராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது, அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதியின்றி மண் அள்ளிக்கொண்டு இருந்தது தெரியவந்ததையடுத்து, அந்த இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பல்லி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (36), பெரும்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் (24) ஆகியோரை கைது செய்தனா்.