பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய இருவா் கைது

கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 மார்ச் 2026, 6:34 pm

செய்யாறு அருகே கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், சிறுவேளியநல்லூா் கிராமத்தில் உள்ள மயிலாத்தமன் கோயிலுக்குச் சொந்தமான குளத்துப் பகுதியில் இருந்து அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளப்படுவதாக செய்யாறு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தாகத் தெரிகிறது.

இதையடுத்து, உதவி ஆய்வாளா் வரதராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது, அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதியின்றி மண் அள்ளிக்கொண்டு இருந்தது தெரியவந்ததையடுத்து, அந்த இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பல்லி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (36), பெரும்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் (24) ஆகியோரை கைது செய்தனா்.