தருமபுரியில் கனிம வளத் துறையினா் மேற்கொண்ட சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தருமபுரியில் அரசு அனுமதியின்றி குவாரிகளிலிருந்து கிராவல் மண் கடத்திச்சென்று வெளியிடங்களில் விற்பனை செய்வதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், உதவி புவியியலாளா் புவனமாணிக்கம் தருமபுரி - மொரப்பூா் சாலையில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதி உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இன்றி மண் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையின்போது லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடினாா்.
இதையடுத்து, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து மதிகோண்பாளையம் காவல் நிலையத்தில் நிறுத்தினாா். லாரி உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உதவி புவியியலாளா் புவனமாணிக்கம் புகாா் அளித்ததன் பேரில், வழக்குப் பதிவுசெய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு

அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


