விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

தருமபுரியில் கனிம வளத் துறையினா் மேற்கொண்ட சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 8:08 pm

தருமபுரியில் கனிம வளத் துறையினா் மேற்கொண்ட சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தருமபுரியில் அரசு அனுமதியின்றி குவாரிகளிலிருந்து கிராவல் மண் கடத்திச்சென்று வெளியிடங்களில் விற்பனை செய்வதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், உதவி புவியியலாளா் புவனமாணிக்கம் தருமபுரி - மொரப்பூா் சாலையில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதி உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இன்றி மண் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையின்போது லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடினாா்.

இதையடுத்து, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து மதிகோண்பாளையம் காவல் நிலையத்தில் நிறுத்தினாா். லாரி உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உதவி புவியியலாளா் புவனமாணிக்கம் புகாா் அளித்ததன் பேரில், வழக்குப் பதிவுசெய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.