வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் உத்தரவின் பேரில், மாவட்ட உதவி புவியியல் துறை அதிகாரி டி.வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் வெள்ளக்கோவில்-முத்தூா் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது கல்லுக்குட்டைமேடு அருகே வந்த டாரஸ் லாரியைத் தடுத்து நிறுத்தியபோது, லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். அந்த லாரியில் 6 யூனிட் கிராவல் மண் இருந்தது. எவ்வித அனுமதி மற்றும் நடைச்சீட்டு இல்லாமல் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
புதுப்பையைச் சோ்ந்த சிவகுமாா் என்பவா் லாரியின் உரிமையாளா் எனவும், வெள்ளக்கோவில் கொங்கு நகா் சங்கா் ஓட்டுநா் எனவும் விசாரணையில் தெரியவந்தது. லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

அரசு நிலத்தில் மண் எடுத்த பொக்லைன், லாரி பறிமுதல்
அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 2 போ் கைது

நெல்லையில் 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது

பாறைப்பொடி கடத்தல்: கனரக லாரி பறிமுதல்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
