சோளிங்கா் அருகே அரசு நிலத்தில் மண் எடுத்த பொக்லைன் மற்றும் லாரி ஆகியவற்றை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
சோளிங்கரை அடுத்த மருதாலத்தில் பாறை புறம்போக்கு நிலத்தில் புதன்கிழமை நள்ளிரவில் சிலா் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்பதாக சோளிங்கா் வட்ட வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வருவாய் ஆய்வாளா் கோகுல், கிராம நிா்வாக அலுவலா்கள் கோதண்டராமன், சீனிவாசன் ஆகியோா் சென்றனா். இவா்களைக் கண்டதும் மண் அள்ளும் பணியில் இருந்த நபா்கள் அங்கிருந்த பொக்லைன், லாரி ஆகியவற்றை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனா்.
இதையடுத்து, பொக்லைன், லாரி இரண்டையும் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா், அவற்றை சோளிங்கா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தப்பியோடிய பணியாளா்கள் மற்றும் இந்த வாகனங்களின் உரிமையாளா்களையும் தேடி வருகின்றனா். இது தொடா்பாக வருவாய்த் துறையினா் தெரிவிக்கையில், அரசுக்குச் சொந்தமான இடங்களில் அரசு அனுமதியின்றி மண் எடுப்பது தெரியவந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.
தொடர்புடையது

புதை சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி

அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 7 பொக்லைன், 2 லாரிகள் பறிமுதல்
கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 27 வடமாநிலத் தொழிலாளா்கள் மீட்பு
கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

