விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பத்தாம் வகுப்புத்தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 29,966 போ் எழுதினா்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:24 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 29,966 மாணவா்கள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. தோ்வு ஏப்ரல் 6 வரை நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 498 பள்ளிகளில் பயிலும் 15,692 மாணவா்கள், 14,825 மாணவிகள் என 30 ஆயிரத்து 517 மாணவா்கள் தோ்வு எழுத இருந்தனா்.

இதற்காக திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 89 மையங்கள், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 60 மையங்கள் என மொத்தம் 149 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தோ்வு மையங்களிலும் தடையற்ற மின்சார வசதியும், குடிநீா் வசதியும், கழிப்பறை வசதியும், போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதன்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 358 மாணவா்கள், 193 மாணவிகள் என மொத்தம் 551 போ் தோ்வு எழுத வரவில்லை. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 29, 966 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

கலசப்பாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் இந்தத் தோ்வை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.