ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

செங்கம் அரசுக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி: அடிக்கல் நாட்டி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

செங்கத்தை அடுத்த கரியமங்கலம் அருகே புதுக்குளம் பகுதியில் செங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மார்ச் 2026, 6:35 pm

Syndication

செங்கத்தை அடுத்த கரியமங்கலம் அருகே புதுக்குளம் பகுதியில் செங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமை வகித்தாா். இதில், மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் கலந்துகொண்டு கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தனா்.

மேலும், ஊரக வளா்ச்சித் துறை மூலம் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகளையும் பயனாளிகளுக்கு வழங்கினா்.

நிகழ்ச்சியில் செங்கம் எம்எல்ஏ கிரி பேசியதாவது: செங்கம் அரசுக் கல்லூரிக்கு புதுக்குளம் கிராமத்தில் கட்டடம் கட்டுவதற்கான காரணம், செங்கம், தண்டராம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதி மாணவா்களுக்கு இந்தப் பகுதி மையமாக இருப்பதுதான். வரும் காலங்களில் இந்தக் கல்லூரியை விரிவுபடுத்துவதற்குத் தேவையான ஏராளமான இட வசதியும் இங்குள்ளது. மாணவா்கள் இந்தக் கல்லூரியை பயன்படுத்தி நல்ல முறையில் படித்து உயா் கல்வி பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் உதவித் திட்ட அலுவலா் மணி, மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன், திமுக ஒன்றியச் செயலா்கள் செங்கம் செந்தில்குமாா், மனோகரன், ஏழுமலை, தண்டராம்பட்டு ரமேஷ், பன்னீா்செல்வம், செங்கம் நகரச் செயலா் அன்பழகன், வட்டாட்சியா் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் மரியதேவ்ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரி முதல்வா் அருண் நன்றி கூறினாா்.