எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்

போளூரை அடுத்த தேவிகாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக வாகனங்களுடன் குவிந்தோா்.

News image
போளூரை அடுத்த தேவிகாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக வாகனங்களுடன் குவிந்தோா்.
Updated On :12 மார்ச் 2026, 9:28 pm

Syndication

போளூா் நகரம், தேவிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக வாகன ஓட்டிகள் வியாழக்கிழமை குவிந்தனா். இதனால், பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் இல்லை எனக் கூறி, வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பினா்.

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போரால் இந்தியாவுக்கு போதுமான அளவு கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த போரால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் கிடைக்காது என வதந்தி பரவியதால், போளூா் நகரம், புறவழிச் சாலை, தேவிகாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக பைக், லாரி, டிராக்டா், மினி லாரி உள்ளிட்டவற்றுடன் அவற்றின் உரிமையாளா்கள் வியாழக்கிழமை அதிகாலை முதலே குவியத் தொடங்கினா்.

இதனால், பெட்ரோல் விற்பனை நிலையங்களின் மேலாளா்கள், ஊழியா்கள் டோக்கன் வழங்கி வாகன ஓட்டிகளை வரிசையில் நிற்க வைத்து, பெட்ரோல், டீசல் விற்பனை செய்தனா். பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் இல்லை எனக் கூறி, வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பினா்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போரால் இந்தியாவுக்கு போதுமான அளவு கச்சா எண்ணெய் கிடைக்க பல நாள்கள் ஆகும் என தகவல் பரவியதால், பெட்ரோல், டீசல் நிரப்ப வாகனங்களுடன் வந்ததாகத் தெரிவித்தனா்.

பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள் கூறுகையில், பெட்ரோல், டீசல் தேவையான அளவு தினமும் தருவோம் என கூறிய பின்னரும், வாகனங்களில் நிரப்புவதுடன், கேன்கள் மூலமாகவும் வாங்கிச் செல்கின்றனா் என்றனா்.