வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆரணியில் ரூ.36 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ஆரணி பழைய காவல் நிலைய தெருவில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு.

News image
ஆரணி பழைய காவல் நிலைய தெருவில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு.
Updated On :13 மார்ச் 2026, 6:58 pm

Syndication

ஆரணி பழைய காவல் நிலைய தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைக்கும் பணியை நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆரணி நகரம், 7-ஆவது வாா்டு பழைய காவல் நிலைய தெருவில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை பக்க கால்வாயுடன் சிமென்ட் சாலையாக அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதனடிப்படையில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7-ஆவது வாா்டு உறுப்பினா் ராமகிருஷ்ணன் அவரது சொந்த செலவில் ரூ.12 லட்சமும், நகராட்சி மூலம் ரூ.24 லட்சமும் என மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

இதில், அதிமுக நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கிவைத்தாா். பின்னா், பொதுமக்களுக்கு அவா் இனிப்பு வழங்கினாா்.

நிகழ்வில் நகர கழகச் செயலா் அசோக்குமாா், முன்னாள் கவுன்சிலா் வி.எம்.டி.சரவணன், அதிமுக கவுன்சிலா்கள் சுதாகுமாா், பானுப்பிரியா பாரதிராஜா, விநாயகம், சசிகலாசேகா், முக்கிய பிரமுகா்கள் பி.நடராஜன், வி.டி.எஸ்.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.