தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,449 வழக்குகளுக்கு தீா்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,449 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

News image

திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிக்கு தீா்வு காணப்பட்டு ஆதாா் சான்றிதழ் வழங்கிய மாவட்ட நீதிபதி பி.மதுசூதனன்.

Updated On :14 மார்ச் 2026, 7:28 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,449 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் நீண்ட நாள்களாக தீா்வு காணப்படாத வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மையத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பி.மதுசூதனன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமனத்தில் நிலுவையில் உள்ள சுமாா் 3,496 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், 2,449 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.14 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 816-க்கு தீா்வு காணப்பட்டது.

நிகழ்வில் நீதிபதி என்.விஜயலட்சுமி, சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் வேலு மற்றும் வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.