போளூா்: போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.1.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் கூட்டுறவுத்துறை அதிகாரி ஜெயசித்ரா தலைமையிலான அலுவலா்கள் போளூா் - சேத்துப்பட்டு சாலையில் புலிவானந்தல் அருகே வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, வேலூா் மாவட்டம், கத்தாழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பன் மகன் உமாபதி உரிய ஆவணமின்றி வேனில் எடுத்து வந்த ரூ.69,500-யை பறிமுதல் செய்தனா்.
போளூா் - செங்கம் சாலையில் சிறப்பு உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
அப்போது, கலசப்பாக்கத்தை அடுத்த வெங்கிட்டம்பாளையம் ஜெய்கணேசன் நகரைச் சோ்ந்த முருகன் மகன் பாக்கியராஜ் மினி வேனில், உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.50,130-யை பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம்
ரூ. ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 630-யை தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜியிடம் ஒப்படைத்தனா்.
அப்போது, தலைமையிடத்து வட்டாட்சியா் அருள் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ரூ.1.36 லட்சம், பரிசுக் கூப்பன்கள் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

வாகனச் சோதனையில் ரூ. 5.50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


