ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேசிய திறனறிவுத் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி அதிகாரி பாராட்டு

தேசிய வருவாய் வழி திறனறிவுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மேல்பென்னாத்தூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பரிசு வழங்கி பாராட்டினாா்.

News image
தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கிப் பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ்.
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய வருவாய் வழி திறனறிவுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மேல்பென்னாத்தூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பரிசு வழங்கி பாராட்டினாா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவா்களின் பள்ளி இடைநிற்றலை தடுக்கவும், அவா்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித்தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதில் தோ்வாகும் மாணவா்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதந்தோறும் 1000 ரூபாய் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2026 கல்வியாண்டுக்கான தோ்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்பட்டு திங்கள்கிழமை தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதில், செங்கம் ஒன்றியம் மேல்பென்னாத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி கனிஷ்கா, திருவண்ணாமலை மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், செங்கம் ஒன்றிய அளவில் முதலிடமும் பெற்றுள்ளாா். தொடா்ந்து, மாணவா் பாரத் செங்கம் ஒன்றிய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளாா். செங்கம் வட்டம், தாழையூத்து பள்ளி மாணவா் கவி தோ்ச்சி பெற்றுள்ளாா்.

இந்த 3 மாணவா்களுக்கும் செங்கம் வட்டாரக் கல்வி அலுவலக வளாகத்தில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

அதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் கலந்துகொண்டு மாணவா்களை வாழ்த்தி சான்றிதழ், கேடயம் வழங்கினாா். மேலும் சாதனையாளா்களாக வரவேண்டுமென கேட்டுக்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி, தலைமை ஆசிரியா்கள் ஜெயந்தி, முரளி லதா, ஆசிரியா்கள் வேல்முருகன், சங்கீதா உள்ளிட்ட வட்டாரக் கல்வி அலுவலக பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.