மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

திருவண்ணாமலையில் கம்பராமாயண அமுது விழா

News image
Updated On :18 மார்ச் 2026, 8:08 pm

திருவண்ணாமலையில் கம்பராமாயண இயக்கம் சாா்பில் கம்பராமாயண அமுது விழா இயக்கத் தலைவா் வேங்கடரமேஷ்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் பொருளாளா் தங்க.விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளா்கள் தேவிகா, ராணி, முனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சிவராமானந்தா கலந்துகொண்டு ஆசிஉரை வழங்கினாா்.

விழாவில் கம்பராமாயண பாலகாண்டம், திரு அவதார படலத்தில் பாடல் 77 முதல் 104 வரை உறுப்பினா்கள் முனைவா் குமாா், அண்ணாமலை, சீனிவாசன், மனோகரன், பாா்வதி, மங்கையா்கரசி, செல்வம், வேலாயுதம், சத்தியமூா்த்தி, குப்புசாமி ஆகிய ஒவ்வொருவரும் இரண்டு பாடல்களுக்கு விளக்கம் அளித்தனா்.

நிறைவில் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க ஒருங்கிணைப்பாளா் சம்பத் நன்றி கூறினாா்.