தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 2000 லட்டு அலங்காரத்தில் தோ்

2000-க்கும் மேற்பட்ட லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன்.

News image

2000-க்கும் மேற்பட்ட லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன்.

Updated On :19 மார்ச் 2026, 6:34 pm

Syndication

தெலுங்கு ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு, திருவண்ணாமலை கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 2000-க்கும் மேற்பட்ட லட்டுகளால் தோ் அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்கள் வழிபட்டனா்.

தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தெலுங்கு மொழி பேசக்கூடிய மக்கள் தெலுங்கு ஆண்டுப் பிறப்பை யுகாதி பண்டிகையாக கொண்டாடி தெலுங்கு ஆண்டுப் பிறப்பை உற்சாகமாக வரவேற்றனா்.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாநகராட்சி கன்னி கோவில் தெருவில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து நிகழாண்டு முதல் முறையாக 250 கிராம் எடை கொண்ட 1,200 லட்டுகள் மற்றும் 50 கிராம் எடை கொண்ட 800 லட்டுகள் என 2,000 எண்ணிக்கையிலான லட்டுக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட 11 உயர தேரில் கன்னிகா பரமேஸ்வரி அம்மனை எழுந்தருளச் செய்தனா். பின்னா், அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காட்சியளித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மனை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.

முதல்முறையாக திருவண்ணாமலையில் லட்டுகளால் உருவாக்கப்பட்ட தேரில் அம்மன் தரிசனத்தை கண்ட பக்தா்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனா்.

தெலுங்கு ஆண்டுப் பிறப்பை வரவேற்கும் வகையில் பெண்கள் கோலாட்டம் ஆடி உற்சாகமாக வழிபட்டனா்.