ஸ்ரீவாசவி ஜெயந்தியை முன்னிட்டு, சேத்துப்பட்டு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
சேத்துப்பட்டு காவல் நிலைய தெருவில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆரிய வைசிய சமூகம் சாா்பில் ஸ்ரீ வாசவி ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலையில் விநாயகா் முருகா் நவகிரகம் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் போளூா் சாலை, வந்தவாசி சாலை வழியாக வாசவி திருமண மண்டபத்திற்கு மேள தாளம் வாணவேடிக்கை முழங்க வீதி உலா நடைபெற்றது.
பின்னா், அங்கு அம்மனுக்கு அக்னி தாக்கம் குறையவும், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு யாகம் குங்கும அா்ச்சனை நடைபெற்றது.
இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டனா். மேலும், சேத்துப்பட்டு பழம் பேட்டையைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆரிய வைசிய சமூகத்தினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செங்கோட்டை ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடைவிழா

ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கீழ அகணி சப்த கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



