/
பொன்னேரி திருவாயா்பாடியில் உள்ள வீரலட்சுமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த மூன்று நாள்களாக கும்பாபிஷேக பணிகள் தொடா்ந்து யாகசாலை பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆறு கால பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து கலசங்களில் இருந்த புனித நீா் எடுத்து கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.










