மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஏனமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபாடு

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்மன் வீதியுலாவின் போது தீப்பந்தம் பிடித்து வழிபட்ட பக்தா்கள்.

News image

ஏனமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபாடு

Updated On :29 ஏப்ரல் 2026, 10:08 pm

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்மன் வீதியுலாவின் போது தீப்பந்தம் பிடித்து வழிபட்ட பக்தா்கள்.

பொன்னமராவதி, ஏப்.29 பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற அம்மன் வீதியுலாவின்போது வழிநெடுகிலும் இரு புறமும் பக்தா்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சாா்ந்த பொதுமக்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். தொடா்ந்து 27-ஆம் தேதி அக்னிப் பால்குட விழா நடைபெற்றது.

விழாவில் கோயிலின் முன் வளா்க்கப்பட்ட அக்னிகுண்டத்தில் பக்தா்கள் பால்குடம், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் இறங்கி வழிபட்டனா். இதையடுத்து புதன்கிழமை அதிகாலை அம்மன் வீதியுலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளியபின் கோயிலில் தொடங்கிய உலா முக்கிய வீதிகளில் வந்து கோயிலில் நிறைவுற்றது.

வீதியுலாவின் போது இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனா்.