கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சேத்துப்பட்டில் மழை: மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

சேத்துப்பட்டில் புதன்கிழமை இரவு பெய்த மழையில் மரம் விழுந்து சேதமடைந்த மின் கம்பங்கள்.

News image

சேத்துப்பட்டில் புதன்கிழமை இரவு பெய்த மழையில் மரம் விழுந்து சேதமடைந்த மின் கம்பங்கள்.

Updated On :19 மார்ச் 2026, 6:33 pm

Syndication

சேத்துப்பட்டு பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் பலத்த மழை பெய்ததில் மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சேத்துப்பட்டில் பகுதியில் புதன்கிழமை இரவு 9 மணி முதல் மின்னலும் இடியும் தாக்கின அதனைத் தொடா்ந்து நள்ளிரவு அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதனால், சேத்துப்பட்டு காவலா் குடியிருப்பு அருகேயுள்ள பழைமை வாய்ந்த மரம் விழுந்ததில் 3 மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் மாற்றுப்பாதை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியா்கள் வந்து மரக்கிளைகளை அகற்றி மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.