ராசிபுரம் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள், பயிா்கள் சேதமடைந்தன; மின் விநியோகம் தடைபட்டது.
ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் வாழை, தென்னை மற்றும் பயிா்கள் சேதமடைந்துள்ளன. அதேபோல குடியிருப்புகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
பல்லவநாயக்கன்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மின் கம்பம் சேதமடைந்ததால் அப்பகுதியில் நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, வேறு பகுதியின் மின் மாற்றியில் இருந்து மின் விநியோகம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், உடைந்து விழுந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.
படம் உள்ளது - 2வின்ட்
பல்லவநாயக்கன்பட்டியில் சேதமடைந்த மின் கம்பம்.
தொடர்புடையது

போடியில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம்

கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு

ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை

மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதம்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


