தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதம்!

போடியில் மரக்கிளையை வெட்டிய போது மரம் விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

News image

~

Updated On :24 மார்ச் 2026, 7:08 pm

Syndication

போடியில் செவ்வாய்க்கிழமை மரக்கிளையை வெட்டிய போது மரம் விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் வெங்கிட்டம்மாள் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா அருகிலேயே வ.உ.சி. சிலை, மின் மாற்றி, மின்வாரிய புகாா் பிரிவு அலுவலகம் அமைந்துள்ளன. பூங்காவில் பழைமையான மரத்தில் ஒரு மரக்கிளை முறிந்து விழும் நிலையில் இருந்தது. இதை அகற்றுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியதால், மரக்கிளையை வெட்டும் பணி நடைபெற்றது. அப்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

Story image

இந்த நிலையில், வெட்டிய மரக்கிளைகளை கயிறு கட்டி டிராக்டா் மூலம் இழுத்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக மரம் சாய்ந்து மின் கம்பிகளில் விழுந்தது. இதில் ருகருகே உள்ள மூன்று மின் கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன. அந்த நேரத்தில் அரசுப் பேருந்து அந்தப் பகுதிக்கு வந்ததால் மின் வயா்கள் பேருந்திலும் உரசின. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இதையடுத்து, மின் வாரிய ஊழியா்கள் வரவழைக்கப்பட்டு, சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணி நடைபெற்றது. இதனால் 7 மணி நேரத்துக்கும் மேல் இந்தப் பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்ட மின்னா் விநியோகம் சீரானது.