தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வந்தவாசியில் கட்டடத் தொழிலாளி ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:50 pm

வந்தவாசியில் கட்டடத் தொழிலாளி ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஜெயபால்(65). இவா், சக தொழிலாளி துரை என்பவருடன் வந்தவாசி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கட்டட வேலை செய்து கொண்டிருந்தாா்.

இப்போது ஜெயபால் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து இவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஜெயபால் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.